// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பாஜக கோரிக்கை

ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பாஜக கோரிக்கை

 திருச்சி திருவெறும்பூர் ஒன்றியம் அரசங்குடி ஊராட்சியில் புதிதாக கட்டபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிகபட்டு 6 மாதம் காலமாகி விட்டது இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் மருத்துவம் பார்க்க முடியாமல் அவதி படுகிறார்கள் ஆகையால் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அவர்களை சந்தித்து பாரதிய ஜனதா கட்சி திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாஜக சார்பாக திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய தலைவர் T.செந்தில் குமார் தலைமையில் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு மனு கொடுக்கபட்டது..




இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னால் பட்டியல் அணி மாநில செயலாளரும் அரசங்குடி சக்தி கேந்திர பொறுப்பாளர் சி. இந்திரன் மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் வேங்கூர் கார்த்திகேயன் பிரபாகரன் மூனிஸ் வரன் ஆகியோர் மனு கொடுக்கும் போது உடன் இருந்தனர்

Post a Comment

0 Comments