// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தமிழக முன்னாள் முதல்வர்  மறைந்த காமராஜரின் 50 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் சங்கம் மாநில தலைவர் ஜெ. முத்து ரமேஷ் நாடார் மற்றும் தொண்டரணி  மாநிலத் தலைவர் வே.முத்துவேல் நாடார் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி 


திருச்சி தமிழ்நாடு நாடார் சங்க தொண்டர் அணி மேற்கு மாவட்ட தலைவர்  ந.சிதம்பரேஸ்வரன் நாடார் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது 





இந்த நிகழ்ச்சியில் டேவிட் மனோகர் நாடார் , சித்திரை ராஜ் நாடார், யுவராஜ் நாடார், பாலகணேசன் நாடார்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments