// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் 


கடந்த சில நாட்களாக திருச்சி, அரியலூர்,பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக விவசாய பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது.





இதனால் விவசாயிகள் சாகுபடி செய்கிறத பல லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி அழுகிய நிலையில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு 40ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் என கோரியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments