மே 31 ஆம் தேதி உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது, அந்த வகையில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை நாகமங்கலம் பகுதியில் அமைந்துள்ள ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் "புகையிலைக்கு எதிராக ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க" என்ற தலைப்பில் போட்டி நடைபெற்றது , இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி பங்கேற்று சிறந்த படைப்பாளர்களுக்கு விருது வழங்கினார் தொடர்ந்து அவர் விழா மேடையில் பேசுகையில்..
"இந்த நிகழ்விற்கு என் தாய் கோவிந்தம்மாள் அழைத்தது போலவே நான் உணர்ந்தேன் .சமூகத்தில் நாம் செய்ய வேண்டிய முதல் பணி — புகையிலை எதிர்க்கும் பணியாக இருக்க வேண்டும். மனிதனாக பிறந்த அனைவரும் முதலில் புகையிலையை எதிர்க்க வேண்டும் என்பது அவசியமாகிறது.
இத்தனை திரைப்படங்களை எடுத்துள்ள எனக்கு, 'புகையிலை எதிர்த்து ஏன் ஒரு திரைப்படம் எடுக்கவில்லை?' என்று என் தாயார் கேட்டதுபோல் உணர்ந்தேன்.மறைந்த நடிகர் ராஜேஷ் அவர்கள், நான் எழுதிய ஒரு வசனத்தை திரைப்படத்தில் கூறியிருந்தார். அந்த வசனம்:
'உடம்பில் உண்டாகக்கூடிய வலியை நீக்குபவன் தான் கடவுள். நீங்கள் உண்மையோடு, ஆசைகள் இல்லாமல், நேர்மையாக இந்தத் துறைக்கு வந்திருந்தால், நீங்களும் கடவுளாகலாம்.'அந்த வசனம் எனது எழுத்து. உண்மையிலேயே, வலியை நீக்குபவர்களே கடவுள். அந்த வகையில், மருத்துவர்களே கடவுள்.
இந்த நிகழ்வில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் , கல்லூரி உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 Comments