பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை கிராமத்தில் வீற்று அருள் பாலிக்கும் ஸ்ரீவேதமாரியம்மன் கோவில் உற்சவம் பார்க்கவ குல நத்தமான் உடையார்,பார்க்கவ குல மலையமான் உடையார்,பார்க்கவ குல சுருதிமான் உடையார்,பார்க்கவ குல மூப்பனார், பார்க்கவ குல நைனார்,சமுதாய மக்களால் வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது .இந்த நிலையில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எந்தவொரு காரணமும் இன்றி தேர்த்திருவிழா நடைபெறுவதற்கு ஆட்சேபித்த நிலையில் தேரோட்டம் தடைப்பட்டுள்ளது.மாண்பமை நீதிமன்றமும் தடையாணை பிறப்பித்துள்ளது .சமூக நீதி காக்கும் அரசாக செயல்பட விரும்பும் தமிழ்நாடு அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு சுமூகமாக தீர்வு கண்டிட வேண்டுகிறேன்.எங்கள் சமுதாய மக்களால் எந்தவொரு பகுதியிலும் அரசுக்கோ மாற்று சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கோ எந்தவித இடையூறும் ஏற்படாத நிலையில் இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க 80 லட்சம் மக்கள் தொகை கொண்ட பார்க்கவ குலத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்
மேலும் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படுபவர்களை கண்டறிந்து தீவிர நடவடிக்கை எடுத்து அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் அரசு போக்குவரத்து கழக நடத்துநர் சமூக விரோதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரழந்து பண்ணிரண்டு நாட்கள் கடந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்யாமல் காவல்துறை காலம் கடத்துவது வேதனைக்குரியது.குற்றவாளிகள் உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்திட அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்
மேலும் உயிரிழந்த மணிகண்டன் அவர்களின் புதல்வர்கள் சிறுவர்களாக இருப்பதைக் கருத்தில் கொண்டு உயர்கல்வி வரை செலவினங்களை அரசு ஏற்று இறந்த மணிகண்டன் மனைவிக்கு இழப்பீடு வழங்குவதுடன் அவருடைய கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களையும் துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
மாவட்டம் தோறும் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் அடங்கிய சமூக நல்லிணக்கக் குழுவை உருவாக்கிட அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்
இவ்வாறு திருமலை எம்.ரவி பார்க்கவன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
0 Comments