NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** வதந்தி பரப்பிய YOUTUBE சேனல் மீது முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி கண்டன அறிக்கை

வதந்தி பரப்பிய YOUTUBE சேனல் மீது முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி கண்டன அறிக்கை

 திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட  செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தனியார் YOUTUBE  சேனலுக்கு அவரது கண்டத்தை பதிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்‌


தற்பொழுது அதிமுகவில் நடைபெற்றுவரும் ஒற்றை தலைமை பிரச்சனையை திசை திருப்பும் நோக்கில் ஒரு தனியார் (YouTube சேனல்) சேனலில்  திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பற்றி தவறான செய்தி ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த வதந்தி செய்தியை ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் .. 


இல்லையென்றால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டார்..அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஒற்றைத் தலைமையே விரும்புகின்றனர், இதனை திசை திருப்பும் நோக்கமாக இது போன்று வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். என்று அதிமுக தொண்டர்களுக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி கேட்டு கொண்டுள்ளார்..

Post a Comment

0 Comments