மாபெரும் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி. தீவிர உறுப்பினர் சேர்க்கையில் இணைந்தவர்கள் பொறுப்பு வழங்கும் நிகழ்வு. ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட துணை செயலாளர் முகமது தாஹா வரவேற்புரையாற்றினார்.
மாநில நிர்வாகிகள் துணைப் பொதுச் செயலாளர் சபீ அகமது மாநில துணை செயலாளரும் திருச்சி மாவட்ட தலைமை பொறுப்பாளருமான பாப்ஜஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமூக நல்லிணக்க தலைவர்கள் அகில முஸ்லிம் லீக் மாநில தலைவர் காஜா மைதீன் பெரியார் கருத்தாளர் பெரியார் சரவணன் பமமுக தலைவர் அல்லூர் சீனிவாசன் மக்கள் நீதி மையம் மாவட்ட செயலாளர் சுரேஷ் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட இளைஞரணி தலைவர் அப்துல் ஹக்கீம் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ஜாகீர் சமூக நீதிப் பேரவை மாநில தலைவர் ரவிக்குமார் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் பஷீர் அலி. ஆகிய தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இறுதியாக தென்னூர் பகுதியை செயலாளர் ஷேக் கான் நன்றி கூறினார்.
அதன் பிறகு 2023 தீவிர உறுப்பினர் சேர்க்கை திட்டத்தின் கீழ் இணைந்தவர்களும் புதிதாக கட்சியின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுத்தவர்களையும் தலைவர் அறிவித்தார்கள்.
அதன் பின்னர் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் பழனி பாபா பேரவையின் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வினை பழனி பாபா பேரவை மாவட்ட செயலாளர் ஆர் கே காஜா அவர்கள் தலைமையில் மாவட்டத் துணைச் செயலாளர் கம்பரசன்பட்டி காஜா முன்னிலையில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்வில் பயனாளர்களுக்கு 200க்கும் மேற்பட்ட சேலைகளை தமஜக தலைவர் அண்ணன் கே எம் சரிப் அவர்கள் வழங்கினார்கள்.
புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளின் பெயர்கள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.
0 Comments