BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** தென்னிந்திய அளவிலான ஐவர் கால்பந்துப் போட்டி

தென்னிந்திய அளவிலான ஐவர் கால்பந்துப் போட்டி

திருச்சி தேசியக் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான ஐவர் கால்பந்துப் போட்டி நடைபெற்றது. 13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும், 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்குமான தனித்தனிப் போட்டிகள் நடைபெற்றன.



கல்லூரிச் செயலர் திருமிகு கா.ரகுநாதன் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார். எக்ஸெல் குழும நிறுவனங்களின் தலைவர் திரு ரோட்டரி முருகானந்தம் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார். 64 அணியினர் இப் போட்டியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.



 பல்வேறு பள்ளிகள், விளையாட்டு சங்கங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர் திரு முருகானந்தம் அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகமூட்டும் வண்ணம் மிகச் சிறப்பாகத் தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினார். முன்னதாக கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் து. பிரசன்ன பாலாஜி அவர்கள் வரவேற்புரை வழங்கிச் சிறப்பித்தார்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments