BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சியில் 35 வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு

திருச்சியில் 35 வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு

 திருச்சி மாவட்டத்தில்  35-வது தேசிய சாலை பாதுகாப்பு வாரம் (11.01.24 முதல் 17.01.24 வரை) கடைபிடிக்கப்படுவருவதை  முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு  பகுதிகளில்   பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்த  விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில்  துண்டறிக்கை வழங்குதல் மற்றும் மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு உரை நிகழ்த்தி உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது..


இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினரும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவருமான ஆர்.கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில்  சத்திரம் பேருந்து நிலையம் ஜங்ஷன் பகுதி டி. வி. எஸ்.டோல்கேட் பொன்மலை கேந்திர வித்தியாலாயா பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள்  மத்தியில் விழிப்புணர்வு  துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு மற்றும் மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.



திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மாணவிகள் அதிகம் உள்ளனர் இதில் இருசக்கர வாகனங்களில் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் விழிப்புடன் தலைக்கவசம் அணிந்து சாலை விதிகளை பின்பற்றி செல்ல வேண்டும்



இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைகவசம் அணியாத காரணத்தினால் செல்போனில் பேசி கொண்டு அதி வேகமாக வாகனம் ஓட்டுவதால்  விபத்து ஏற்பட்டு,  தங்களது விலைமதிப்பில்லா உயிரை இழந்து வருவதை தவிர்க்கும் விதத்தில் வாகன ஒட்டிகள் தங்களது உயிரை காத்து கொள்வதுடன், சாலையை பயன்படுத்தும் பொதுமக்களின் விலைமதிப்பற்ற உயிரை பாதுகாக்காவும், சாலை விதிமுறைகளை தவறாது பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும்..



எனவும், திருச்சி மாவட்டத்தில் விபத்துக்களை அறவே ஒழிக்க நாம் ஒன்றினைந்து முயற்சி மேற்கொண்டு சாலை விபத்துகளை தவிர்க்க வேண்டும்  சாலையில் பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது எப்படி  போக்குவரத்து விதி மீறல் செய்தால் அபராதம் மற்றும் தண்டனை உள்ளிட்ட தகவல்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி வழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது ..






இந்நிகழ்வில் ஒயிட் ரோஸ் பொது நல அமைப்பின் தலைவர் சங்கர் பெட்காட் அமைப்பின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் சமூக  செயற்பாட்டாளர்கள் கோவிந்தசாமி ஆர்ம்ஸ்ட்ராங்  ராபி பெட்காட் திருச்சி மாவட்ட மகளிர் பிரிவு செயலாளர் பாத்திமா கண்ணன் தாய் நேசம் அறக்கட்டளை நிறுவனர் தலைவர் ஹப்சி சத்தியாராக்கினி அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின்  நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளரும் தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர். ஏ. தாமஸ் விளையாட்டு பிரிவு செயலாளரும் தடகள விளையாட்டு பயிற்ச்சியாளருமான சுரேஷ் பாபு இணைச் செயலரும் குத்துச்சண்டை பயிற்சியாளருமான எழில் மணி மகளிர் பிரிவு இணைச் செயலருமான அல்லி கொடி பொன்மலை கேந்திரிய வித்யாலயா பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார் உடற்கல்வி ஆசிரியர் ஆண்டோ ஆசிரியர்கள் திரளான மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments