NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச் சங்கம் சார்பில் கிழக்கு மண்டல ஆலோசனை கூட்டம்

இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச் சங்கம் சார்பில் கிழக்கு மண்டல ஆலோசனை கூட்டம்

 இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச் சங்கம் சார்பில் ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள் பதினோராவது மாநில எழுச்சி மாநாடு நடத்துவது தொடர்பாக கிழக்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் நிச்சயம் மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.


சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி என் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்.


சென்னையில் 11 வது மாநில எழுச்சி மாநாடு நடத்துவது தொடர்பாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் திருச்சி கிழக்கு மண்டல மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வி என் கண்ணன் கூறும்போது...




ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நாங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக வருகிறோம் விவசாயிகள் பொதுமக்களுக்கு குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் எங்களுக்கு குரல் கொடுப்பதில்லை ஒரு ஏழை ஒரு இடம் வாங்க வேண்டும் என்றால் கூட அதற்கு நாங்கள் தான் கடமையாக பாதிக்கப்படுகிறோம் ஒழுங்குமுறை ஆணையம் என்பது சரியாக செயல்பாட்டில் இல்லை வரும் தேர்தலில் எங்களுக்கான ஓட்டு யாருக்கு என்பது குறித்து நிலைபாட்டை வரும் மாநாட்டில் தெரிவிக்க உள்ளோம் என கூறினார்

Post a Comment

0 Comments