NEWS UPDATE *** ஜூன்.8ம் தேதி மதுரையில் பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை! *** மதுரையில் வருகிற ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் திருச்சியில் பேட்டி

மதுரையில் வருகிற ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் திருச்சியில் பேட்டி

மதுரையில் வருகிற ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிகாட்டுதலின்படி, இந்து முன்னணி நடத்தும் இந்த மாநாட்டில், ஆர்எஸ்எஸ்இன் பரிவார இயக்கங்கள் சேர்ந்து நடத்துகின்ற மாநாடு மதுரை அம்மா திடலில் நடைபெறுகிறது என்றும், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட முருகபக்தர்கள் பங்கேற்பார்கள் என்றும், அறுபடை கோவில்களின் கண்காட்சி நடைபெறுகிறது. 


இதில் ஏதேனும் அரசியல் கிடையாது, இதை பார்ப்பவர்கள் அரசியலாக எடுத்துக் கொண்டால் ஆட்சேபனை இல்லை, ஜாதிகளை கடந்து இந்துக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்பதை இதன் நோக்கம். நிகழ்ச்சி முடியும்தருவாயில் 5 லட்சம் பேரும் ஒன்றிணைந்து ஒரேகுரலில் கந்த சஷ்டி கவசம் பாடுவார்கள் என்றும் இது உலகசாதனையாக அமையும். ஆந்திராவின் துணை முதல்வர் பவன்கல்யாண், உத்தரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத், சன்னிதானங்கள், மடாதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் நாடு முழுவதும் இருந்து முருகன் அடியார்கள் பங்கேற்பார்கள்.


தமிழக அரசுக்கு முறையாக அனுமதிகேட்டு மனு அளித்து இருப்பதாகவும் தமிழக அரசும் காவல்துறையும் முறையாக அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கடந்த ஆண்டு திமுக முருகன் மாநாடு நடத்திய நிலையில், அவர்களுக்கே முருகன் தேவைப்படும்போது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக, இந்துக்களுக்கு முருகன் தேவைப்படுவார் என்பதை திமுக புரிந்துகொள்ள வேண்டும்



இந்த மாநாட்டுக்குப்பிறகு தமிழகத்தில் இந்து என்பது பரிகாச பொருளாக இருக்க முடியாத நிலை உருவாகும், மற்ற மாநிலங்களில் இல்லாதவாறு நாத்திகவாதிகள் ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி பேசுகின்றனர்.ஆனால் இந்துக்களின் வாக்கைப்பெற்று ஆட்சியில் இருப்பவர்கள் மற்றும் அமைச்சர்கள் இந்துக்களையும் இந்து தெய்வங்களையும் தெரியாத பேசுவதை  இந்த மாநாட்டிற்கு பிறகு அது அனுமதிக்க முடியாததாக மாறிவிடும், எந்த மாநில முதலமைச்சரும் இந்துக்கள் திருடன் என கூறுவது கிடையாது, எந்த ஒரு துணை முதல்வர் நான் சனாதனத்தை ஒழிப்பேன் என கூறவில்லை அதேபோல எந்தஒரு அமைச்சரும் இந்துக்களுக்கு எதிராக பேசுவதில்லை. அண்டை மாநிலமான கேரளாவில் கூட மதங்களை பற்றி குதர்க்கமாக பேசுவது இல்லை ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் இந்துக்களையும் மதத்தையும் குதர்க்கமாக பேசி வருகின்றனர் இந்த மாநாட்டுக்கு பிறகு இனி போல அது நடைபெறாது.

இந்திய அரசியல் சட்டவிதிகளில் எந்த மதத்தையும் காயப்படுத்தக் கூடாது என கூறி உள்ளனர்

அரசியலில் மட்டும் தான் திமுக எங்களுக்கு போட்டி ஆன்மீகத்தில் திமுக எங்களுக்கு போட்டி இல்லை, பக்தியில் எங்களுடன் போட்டியிட முடியாது. 

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும்விதமாக தேசியக்கொடி ஊர்வலத்தை திமுகவும், பாஜகவும் நடத்தியது என்பது போட்டி இல்லை. விநாயகர் சதுர்த்தியின்போது அறிவாலயத்தின் வாசலில் விநாயகர் சிலை வைக்கவேண்டும், அதன்மூலம் விநாயகர் சிலையை உடைத்த பாவம் தீரும் என்றார்.

கமலஹாசன் சொன்ன கருத்து தமிழகத்தில் பலர் சொன்ன கருத்துதான் கூறியுள்ளார், மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் எழுதியதில் கூட தமிழ்த்தாயின் உதிரத்தில் இருந்து என குறிப்பிடப்பட்டுள்ளது.

தனித்த அடையாளத்துடன் கன்னட மக்கள் இருக்கவேண்டும் என விரும்பும்பட்சத்தில் அதில் தலையிடகூடாது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. தங்களது அடையாளத்தை, ஆளுமையை தமிழ்வந்து அழிப்பதாக கன்னடர்கள் எண்ணினால் கமல் தான் கூறிய கருத்தை திரும்பபெற வேண்டும். அவர் ஒன்றும் மொழியியல் அறிஞர் அல்ல சினிமாக்காரர் தான், மொழி விஷயத்தில் சென்சிட்டிவாக கருத்து கூறி இரு மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவு மற்றும் நட்பை சகோதரத்துவத்தை கெடுக்க வேண்டாம். கன்னடத்தைச் சேர்ந்தவர்களும் இதனை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்

முருகன் மாநாட்டில் பங்கேற்பதற்காக அனைத்து கட்சியினருக்கும் தலைவர்களுக்கும் அழைப்பு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் கடவுள் முருகன், தமிழ்நாட்டை தாண்டி முருகன் இல்லை என கூறுவதை ஏற்கமுடியாது, கேரளா மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் முருகனுக்கு பல கோவில்கள் உள்ளது. இந்தியா முழுக்க கடவுளாக கொண்டாடுகின்றனர்.

நேரு காலத்தில் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானிடம் வழங்கப்பட்டது தற்போது அதனை ராகுல் காந்தி எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது, அதேபோன்று கச்சத்தீவை இந்திரா காந்தி காலத்தில் வழங்கப்பட்டது தற்போது அதனை மீட்போம் என கூறுவதும் வேடிக்கையாக உள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும், அதேபோன்று பலூசிஸ்தானும் பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்படும் என்றார். பலுசிஸ்தான் இந்தியாவுடன் நட்புறவாக இருக்க விரும்புகிறது, அந்த மக்களுக்காக பிரதமர் கூட செங்கோட்டையில் உரையாற்றியுள்ளார். துருக்கியை தவிர எந்த நாளும் பாகிஸ்தானை நேரடியாக ஆதரிக்கவில்லை, சீனாகூட நேரடியாக ஆதரிக்க முன்வரவில்லை. தற்போது நடந்த போர் பாகிஸ்தானுக்கு எதிரானது அல்ல தீவிரவாதத்திற்கு எதிரானது.உலகத்தில் உள்ள பயங்கரவாதிகள் அனைவருக்கும் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கும் பட்சத்தில் அதற்கு எதிராக போர்தொடுப்பதில் தவறில்லை என்றார்.



Post a Comment

0 Comments