NEWS UPDATE *** ஜூன்.8ம் தேதி மதுரையில் பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை! *** NR IAS அகாடமியில் 49 வது வெற்றி விழா : எனது வெற்றியால் பெற்றோர் கிராமத்துக்குள் தலைநிமிர்ந்து நடக்கிறார்கள் கிராம நிர்வாக அலுவலராக தேர்வு செய்யப்பட்ட மாணவர் உருக்கம்

NR IAS அகாடமியில் 49 வது வெற்றி விழா : எனது வெற்றியால் பெற்றோர் கிராமத்துக்குள் தலைநிமிர்ந்து நடக்கிறார்கள் கிராம நிர்வாக அலுவலராக தேர்வு செய்யப்பட்ட மாணவர் உருக்கம்

திருச்சி ராம்ஜி நகர் அருகு கே. கள்ளிக்குடியில்  NR IAS  அகாடமியின் 49 வது வெற்றி விழா இன்று கூட்ட அரங்கில் நடந்தது. அகாடமி தலைவர் ஆர் விஜயாலயன் தலைமை தாங்கினார். இதில் TNPSC உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். 



நிகழ்வில் சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று மயிலாடுதுறையில் கிராம நிர்வாக அலுவலராக பணி நியமனம் பெற்ற தர்மபுரி பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த என் ஆர் ஐ ஏ எஸ் அகாடமி மாணவன் சரத்குமார்  தனது  அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் அப்போது அவர் கூறியதாவது;-நான் எம் எஸ் சி பட்டப் படிப்பு முடித்துள்ளேன். எனது தந்தை விவசாயம் செய்து வருகிறார். எனது தந்தை விவசாய பணிகளுக்காக கிராம நிர்வாக அலுவலரை பார்க்கச் செல்லும்போது சில நேரங்களில் கைகட்டி நிற்பதாக கூறுவார். எனது வெற்றியால் இப்போது என் தந்தை கிராமத்துக்குள் தலை நிமிர்ந்து நடக்கிறார். பொது இடங்களில் கெத்தாக உட்கார்ந்து தேநீர் அருந்துகிறார்.எனக்கு பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் இருந்தன. இருந்தாலும் தந்தையின் தாக்கத்தால் கிராம நிர்வாக அலுவலர் பதவியை தேர்ந்தெடுத்தேன். இந்தப் பணிக்கு நல்ல மரியாதை இருக்கிறது. அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும். 

போட்டி தேர்வுகளுக்கு வரும் உங்களது பெற்றோர்கள் எல்லாருமே நடுத்தர வகுப்பினர்களாகத்தான் இருப்பார்கள். 

சீக்கிரமாக படித்து வேலைக்கு சென்று தாய் தந்தையருக்கு 

விடுதலை கொடுங்கள். அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.

இங்கு படிக்காமல் சும்மா இருந்தா ரிசல்ட் ஜீரோ தான்.படித்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். அகாடமித் தலைவர் ஆர்.விஜயாலயன் அனைத்து பாடங்களையும் சிறப்பாக நடத்துவார்.நான் இன்று காலை 6:00 மணிக்கு இங்கு வந்தேன். அப்போது விடுதியில் 8.30 மணி வரை மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்தேன். இப்படி இருந்தால் போட்டி தேர்வில் ஜெயிக்க முடியாது. இப்போதும் நான் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். 

குரூப் 2 வில் வெற்றி பெற்று ஆர்டிஓ ரேங்குக்கு  செல்வேன். இந்த அகாடமியில் படிக்கும் போது பண்டிகை காலங்களில் கூட நான் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றதில்லை. அப்போது உறவினர்கள் எல்லாம் பண்டிகைக்கு கூட வராமல் படிக்கிறானா அப்போது ஜெயித்து விடுவானா என்றெல்லாம் ஏளனமாக கேட்பார்கள். இப்போது என் வெற்றி அவர்களுக்கு பதில் கொடுத்துள்ளது. அலட்சியமாக இருக்காமல் விடாமுயற்சியுடன் படித்தால் வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார். அதைத்தொடர்ந்து அகாடமி தலைவர் ஆர். விஜயாலயன், அவருக்கு ரூ.10 வழங்கிஅரசுப் பணியில் லஞ்சம் வாங்க மாட்டேன் என உறுதிமொழி பெற்றுக் கொண்டார். இதில் திரளான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments