இதயத்தில் துளை ஏற்பட்டு மரணத்தின் விளிம்பு நிலைக்கு சென்ற முதியவரின் உயிரை காப்பாற்றி திருச்சி அப்போலோ இதய நோயியல் துறை மருத்துவர்கள் சாதனை...!
திருச்சி அப்போலோ மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை குழுவினர், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர், அதில்...
இதனையடுத்து முதியவர் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து உடனடி அவசர இதய பைபாஸ் அறுவை சிகிச்சை வாயிலாக இதய ரத்த குழாய்கள் சரி செய்யப்பட்டு இதயத்திற்கு போதிய ஆக்சிஜன் கிடைக்கவும், இதயம் சீராக ரத்தத்தை பம்ப் செய்யவும் வழி செய்யப்பட்டது. மிட்ரல் வால்வுகள் சரி செய்யப்பட்டு ரத்த கசிவு தடுக்கப்பட்டு துளையும் அடைக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர கண்காணிப்பிற்கு பிறகு 6 வது நாளில் முதியவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என தெரிவித்தனர்
செய்தியாளர் சந்திப்பின் போது இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ஸ்ரீகாந்த் பூமனா, டாக்டர் அரவிந்த், இதய மயக்கவியல் நிபுணர்கள் டாக்டர் ரோகிணி, டாக்டர் சரவணன் மற்றும் இதய நோய் சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் டாக்டர் காதர் சாகிப், டாக்டர் ரவீந்திரன், டாக்டர் சாம் சுந்தர் ஆகியோர் அடங்கிய குழுவினர் மற்றும் துணை பொது மேலாளர் சங்கீத ராம மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments