NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் 2 லட்சம் மதிப்புள்ள 20 மூட்டை குட்கா பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

திருச்சியில் 2 லட்சம் மதிப்புள்ள 20 மூட்டை குட்கா பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள ஐயப்பன் கோயில் அருகில் தனிப்படை காவல் ஆய்வாளர் உமா சங்கரி வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் வந்த புத்தூர் விஎன்பி தெருவை சேர்ந்த ஜெயராமன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.


ப்போது அந்த நபரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களான ஹான்ஸ், ஷைனி ,விமல், கணேஷ், கூலிப், ஆர் எம் டி பால்ராஜ் போன்ற குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் மூட்டைகளில் கடத்தி வந்துள்ளார்.

இவற்றை பறிமுதல் செய்த தனிப்படையினர் 20 மூட்டைகளில் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ளகுட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஜெயராமன் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Post a Comment

0 Comments