திருச்சி கொள்ளிடம் ஆற்றில் உள்ள ரயில்வே பாலத்தின் தூண்களில் ஏற்பட்டுள்ள அரிப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியினர் ரயில்வே அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தினர்..
ஆம் ஆத்மி கட்சி மாநில மகளிர் அணி செயலாளரும் திருச்சி மண்டல பொறுப்பாளருமான ஸ்டெல்லா மேரி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மூத்த கண்காணிப்பு பொறியாளரை சந்தித்து மனு அளித்தனர்...
தொடர் மழை மற்றும் காவேரி ஆற்றின் நீர்வரத்து அதிகமாகும் சூழலில் மேலும் பழுதடையும் எதிர்காலத்தில் பெரும் ரயில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது...அதனால் பெரும் சேதமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது...
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை , காசி முதல் ராமேஸ்வரம் வரை அனைத்து மக்களும் புனித யாத்திரை செல்லும் வழித்தடம் ஆகும்...
எனவே உடன் துரிதமாக செயல்பட்டு உரிய முன்னெடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது
0 Comments