// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

திருச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

 திருச்சி அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் ரேபிடோ பைக் டாக்சி நிறுவனம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் திருச்சி தில்லை நகரில் உள்ள கி.ஆ.பெ ஆரம்ப பள்ளியில் இன்று நடைபெற்றது. அகர்வால் கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் கணபதி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில்  ரேபிடோ மேலாளர் ஈஸ்வர், அலுவலர்கள் ரமேஷ், சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இம்முகாமில் கண்புரை மற்றும் பார்வை குறைபாடு போன்ற அனைத்து கண் நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்பட்டது.




கிட்டப்பார்வை,  தூரப்பார்வை உள்ளவர்களுக்கு  கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட  ஏராளமானோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

Post a Comment

0 Comments