// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** பீமநகர் பாலக்காட்டு பாஞ்சாலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பீமநகர் பாலக்காட்டு பாஞ்சாலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திருச்சி பீமநகர் பென்சனர் தெருவில் அமைந்திருக்கும் பாலக்காட்டு பாஞ்சாலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி முகூர்த்த கால் நடப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தது. 

அதனை தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாக பூஜையுடன் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணி அளவில் வேத மந்திரங்கள் முழங்க அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கபட்டது. 



அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா  ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் அப்பகுதி பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Post a Comment

0 Comments