NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் எம்.ஜி.ஆர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் எம்.ஜி.ஆர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

 திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசனை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து நிர்வாகிகளுடன் சென்று மாவட்ட செயலாளர் சீனிவாசன் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


மேலும் திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கும், மரக்கடையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், அவைத்தலைவர் ஐயப்பன், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன்,ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன்,இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார்,பகுதி செயலாளர்கள் அன்பழகன்,பூபதி, சுரேஷ்குப்தா,எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, கலைவாணன், கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, அரவிந்தன்,முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர், நிர்வாகிகள் இன்ஜினியர் இப்ராம் ஷா மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments