இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு முகாம் அமிர்தம் வித்யாலயா சார்பில் பிப்ரவரி நான்காம் தேதி நடைபெற உள்ளது இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு திருச்சி பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. அமிர்தம் வித்யாலயா மருத்துவமனை மருத்துவர்கள், பாலாஜி, சித்தாநந்தாமிர்த சைதன்யா கூறுகையில்..,
100 -ல் 1 குழந்தைக்கு இதய நோய் பாதிப்பு இருக்கிறது. 10 சதவீத குழந்தைகளுக்கு பிறந்து 1 மாதத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும். 40 சதவீத குழந்தைகளுக்கு 1 வருடத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். இதய நோய் என்பது பரவலாக காணப்படுகிறது.
அமிர்தம் வித்யாலயா மருத்துவமனை சார்பில் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம் பிப்ரவரி 4ம் தேதி நடைபெறுகிறது. காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம்
0 Comments