தாய்லாந்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாணவர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு ஜல்லிக்கட்டு போட்டி போல் சிலம்பத்தை ஊக்குவிக்க கோரிக்கை
திருச்சி மாவட்ட யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிலம்பு பயிற்சி கடந்த நான்கு வருடமாக நடத்தி வருகின்றனர்.
இதனை அடுத்து இன்று திருச்சி ரயில்வே நிலையம் வந்த மூன்று மாணவர்களுக்கு சலவை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இது குறித்து யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் ரபீக் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.... அவர் கூறுகையில்...தமிழர்களின் அடையாளமாக இருக்கக்கூடிய சிலம்பப் போட்டியை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும். தற்பொழுது விளையாட்டு நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் போல சிலம்ப போட்டிக்கும் முக்கியத்துவம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என கூறினார்.
0 Comments