BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில், 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே மேம்பால பணிக்கு காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டும் விழா

குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில், 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே மேம்பால பணிக்கு காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டும் விழா

கரூர் மாவட்டம் குளித்தலை இருந்து மணப்பாறை செல்லும் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டநாள் கோரிக்கையாக வைத்துள்ளனர். இதுகுறித்து எம்பி பாரிவேந்தரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். 


அதனைதொடர்ந்து எம்பி பாரிவேந்தர் மத்திய ரயில்வே துறை அமைச்சர் மற்றும் பல்வேறு துறை அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள ரயில் மேம்பாலங்கள் மேம்படுத்தும் பணிகளுக்கு காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினர். அதன் ஒரு பகுதியாக குளித்தலை ரயில் நிலைய வளாகத்தில் குளித்தலை மணப்பாறை ரயில்வே கேட் மேம்பாலம் அமைப்பதற்காக ரூ. 34 கோடி மதிப்பீட்டில் பிரதமர் மோடி  அவர்கள் காணொளி காட்சி மூலம்அடிக்கல் நாட்டும்  நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா வினோத்குமார் மாவட்ட  பொதுச்  செயலாளர் கோபிநாத் ,மாவட்ட செயலாளர்கே வி எல் கதிரேசன்,



 குளித்தலை நகரத்தலைவர் கே எஸ்.பொன் கணேசன் , குளித்தலை ஒன்றிய தலைவர் ரஞ்சித் குமார் , ஞான நரசிம்மன் மற்றும் ஜ.கே.கே மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா, மாவட்ட செயலாளர் பிச்சை, மாவட்ட பார்குவள சங்கத் தலைவர் இன்ஜினியர் சக்திவேல், மற்றும் பாஜக, ஐ.ஜே.கே. மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து  கொண்டு மேம்பாலம் அடிக்கல் நாட்டி நிகழ்ச்சியை  சிறப்பித்தனர்.

நிருபர் கரூர் குமரவேல் 

Post a Comment

0 Comments