// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சிராப்பள்ளி மாநில நெடுஞ்சாலையான சென்னை-திருச்சி-திண்டுக்கல்  சாலையில் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி முதல் திருச்சி இரயில்வே சந்திப்பு திண்டுக்கல் பிரியாணி கடை வரை உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அப்புறப்படுத்த கோரி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. 


ஆனால் ஆக்கிரமிப்பு கடைகளில் அகற்றப்படாததால் இன்று காலை நெடுஞ்சாலைத்துறை சார்பில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் புகழேந்தி தலைமையில் உதவி பொறியாளர் நடராஜன் மற்றும் ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு மாநில நெடுஞ்சாலைத்துறை சாலையை ஆக்கிரமிப்பு செய்த கட்டிடங்களை அகற்றினர். 




இந்த நிலையில் ஜங்ஷன் பகுதியில் சிறிது நேரம் பரப்பு ஏற்பட்டது. முன்னதாக அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments