NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** விவசாயிகள், சுயஉதவி குழுக்கள் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்களுக்கான காலநிலை திறன் மிகு வேளாண்மை, நீர்வள மேலாண்மை மற்றும் வனப்பாதுகாப்பு குறித்த ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது

விவசாயிகள், சுயஉதவி குழுக்கள் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்களுக்கான காலநிலை திறன் மிகு வேளாண்மை, நீர்வள மேலாண்மை மற்றும் வனப்பாதுகாப்பு குறித்த ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது

 திருச்சி வனவியல் விரிவாக்க அலுவலகம், எம்.ஆர்.பாளையத்தில் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் திருச்சி வனக்கோட்டம் இணைந்து விவசாயிகள், சுயஉதவி குழுக்கள் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்களுக்கான காலநிலை திறன் மிகு வேளாண்மை,நீர்வள மேலாண்மை மற்றும் வனப்பாதுகாப்பு குறித்த ஒரு நாள் கருத்தரங்கு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்  பிரதீப்குமார்  மற்றும் தலைமை வனப்பாதுகாவலர் பெரியசாமியின் அறிவுரையின்படியும், மாவட்ட வன அலுவலர் கிருத்திகா ஆலோசனைபடியும் நடைப்பெற்றது.

உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமார் , வனவியல் விரிவாக்க அலுவலர் ,   தலைமையில் நிகழ்ச்சி துவங்கப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் விதமாக மீண்டும் மஞ்சப்சபை மற்றும் காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் முக்கிய காரணியாக மரம் நடுதல் அமைந்துள்ளது என்ற கருத்துக்களை பதிவு செய்து பங்குபெற்றவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பை வழங்கினார்.


தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரி உதவி பேராசிரியர் Dr.பாக்கியலட்சுமி  (வனவியல்)  காலநிலை மாற்றம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள், வனப்பாதுகாப்பு, பசுமைபரப்பை அதிகரித்தல், வனவிலங்குகளை பாதுகாத்தல் போன்ற பல்வேறு கந்ததுகளையும், நாளந்தா வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் ராஜேஷ் காலநிலை திறன்மிகு விவசாயம், நிலையான விவசாய நடைமுறைகள், கிராமபுறம் மற்றும் நகர்புறங்களில் நீர்பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்த கருத்துக்களையும் மற்றும் திருச்சி மாவட்டத்திற்குரிய காலநிலை மாற்றத்தை உள்ளடக்கிய பல்வேறு தகவல்களை காட்வின் ,நிஜில் பசுமை தோழர்,   பங்பெற்றவர்களுக்கு எடுத்துரைத்தனர்.


பின்னர் வனச்சரக அலுவலர்கள் ரவி மற்றும் கிருஷ்ணன்  மூலம் பயிற்சியில் பங்குப்பெற்றவர்களுக்கு பல்வேறு நாற்றங்கால் செயல்முறைகள் தரமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் முறைகள், மரக்கன்றுகள் நடவுசெய்யும் முறைகளை எடுத்துரைத்து பின்னர் பங்குப்பெற்றவர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத முறையில் பயன்படுத்தப்பட்டது.

மேலும் இந்த ஒருநாள் கருத்தரங்கு கூட்டம் விவசாயிகள், சுயஉதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வளர்களுக்கும் பயன்பெறும் வகையில் அமைந்தது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வளசரக  அலுவலர் ரவி செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் விக்னேஷ் வனவர், கோகிலா வனவர் மற்றும் இதர அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

Post a Comment

0 Comments