சமூக சீர்திருத்ததிற்காவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடிய தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு அதைத்தொடர்ந்து வாக்கு திருட்டு பற்றி மக்களிடம் விழிப்புணர்வு கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, மாவட்ட துணைத்தலைவர்கள் உரந்தை செல்வம், பூக்கடை பன்னீர், ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் ஜெயம் கோபி, மார்க்கெட் கோட்டத் தலைவர் பகதுர்ஷா, சுப்ரமணியபுரம் கோட்ட தலைவர் எட்வின், பொன்மலை கோட்டத் தலைவர் பாலு, திருவானைக்கோவில் கோட்டத் தலைவர் தர்மேஷ், தில்லைநகர் கோட்ட பொறுப்பாளர் ராகவேந்திரா, மலைக்கோட்டை கோட்டத் தலைவர் வெங்கடேஷ் காந்தி, புத்தூர் கோட்டத் தலைவர் மலர் வெங்கடேஷ், அணித்தலைவர்கள் எஸ் சி பிரிவு கலியபெருமாள், கலை பிரிவு அருள், மனித உரிமை பிரிவு எஸ் ஆர் ஆறுமுகம், சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், ஆர்டிஐ பிரிவு கிளமெண்ட், அமைப்பு சாரா பிரிவு மகேந்திரன், விவசாய பிரிவு அண்ணாதுரை, மகிளா காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவி கவிதா நாச்சியார், வார்டு நிர்வாகிகள் ஏர்போர்ட் ரீகன், பாண்டியன், பெல்ட் சரவணன், நூர் அகமது, கண்ணன், கிஷோர், சம்பத், ரபீக், ஆரிப், கவுஸ், அனந்த பத்மநாபன், ரவி, லட்சுமிஅம்மாள், ஹீரா, மகேஷ் ,சுப்புராஜ்,வளன் ரோஸ், எழில், மற்றும் பல நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
0 Comments