// NEWS UPDATE *** ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணைத் தொகை... அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி *** திருச்சியில் அறம்மிகு அடிகளார் எழுதிய "அருள் ஞான விளக்கு " புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

திருச்சியில் அறம்மிகு அடிகளார் எழுதிய "அருள் ஞான விளக்கு " புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட வயலூர் தனியார் திருமண மண்டபத்தில் பிரம்ம ஞானம் தருமச்சாலை நிருவனர் தவத்திரு அறம்மிகு அடிகளார் எழுதிய "அருள் ஞான விளக்கு "  புத்தகத்தினை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி சூர்யா சிவா  பெற்றுக்கொண்டார்...

நிகழ்ச்சியை தொடர்ந்து யோகாசனம் மற்றும் இயற்கை மருத்துவம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் கலைக்காவேரி  நூண்கலை கல்லூரி பேராசிரியர் சதீஷ்குமார் தொகுப்புரை வழங்கினார், ப்ரீத்தி, புஷ்பகரணி ,ஹரிஷ் ,கணபதி ,ஜெகதீசன் , ஸ்ரீலேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.


அதிகாலையில் அனாதி நாதர் சித்தர் வழிபாடு மற்றும் அருள் ஒளி தியானம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments