// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் வழக்கம் போல் செயல்படும்: தொ.மு.ச. மாவட்டச் செயலாளர் மலர்கண்ணன் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் வழக்கம் போல் செயல்படும்: தொ.மு.ச. மாவட்டச் செயலாளர் மலர்கண்ணன் அறிவிப்பு

நாளை அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் வழக்கம்போல் இயங்கும் என தொ.மு.ச. டாஸ்மாக் திருச்சி மாவட்ட செயலாளர் மலர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக சில டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் வழக்கம் போல் இயங்கும் என திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச. டாஸ்மாக் திருச்சி மாவட்ட செயலாளர் மலர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments