// NEWS UPDATE *** 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேமுதிக விருப்பமனு விநியோகம் இன்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு வரும் 15ம் தேதிக்குள் விருப்பமனுக்களை தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல் *** திருச்சிக்கு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிற 11-ம் தேதி வருகை தரும் பிரதமர் - இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்.

திருச்சிக்கு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிற 11-ம் தேதி வருகை தரும் பிரதமர் - இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார் அதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் பாஜகவின் மாநில பொது பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் பாஜக கட்சி நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியை நிர்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் ஆய்வு செய்தனர் .

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் :- முன்னதாக திருச்சி புதுக்கோட்டை , தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைகளில் அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். 

திருச்சியில் நடைபெறும் கூட்டம் தேர்தல் பரப்புரை கூட்டமாக அமையும் பிரதமர் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வருவார் என்றார்.

Post a Comment

0 Comments