தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.திமுக கூட்டணிகள், அதிமுக கூட்டணிகள், நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தமிழக தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அவர் செய்தது பூஜ்யம் தான். இந்த தொகுதியில் உள்ள நான்கு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விளையாட்டு மைதானம் என்பதே கிடையாது.ஆனால் இந்த தொகுதியில் 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஒலிம்பிக் அகாடமி மைதானத்திற்கான பணிகள் நடந்து வருகிறது.இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் பயனடைவது என்பது கேள்விக்குறிதான் ?இது தனியார் பள்ளிகளுக்காக உருவாக்கப்படுகிறது. இந்த தொகுதியில் 200 மாணவர்களுக்கு மேல் படிக்கக்கூடிய பள்ளிகளில் முறையான கழிவறை வசதி கிடையாது.இந்த நிலை மாற வேண்டும் என்ற முனைப்போடு மாற்றத்தை நோக்கி பயணிக்கிறோம்.
கொள்கைகளையும், தத்துவங்களையும் சுமந்து நிற்கும் எங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கும் நம்பிக்கையோடு இந்த பிரச்சாரத்தை துவங்குகிறேன்.
எங்களது தொண்ட அறிக்கையில் 26 வாக்குறுதிகள் அளித்துள்ளோம்.
நான் சட்டமன்ற உறுப்பினரானால் ஓராண்டுக்குள் தொகுதி மக்களின் நீண்ட கால பிரச்சனையானா சர்வீஸ் சாலை அமைக்கப்படும், அதே போல் 2 ஆண்டுக்குள் அரியமங்கலம் குப்பை கிடங்கை அகற்றப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை போல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அன்பின் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த கோரிக்கையை அவர் நிறைவேற்றுவாரா? சவால் விடுகிறேன். சாவல் விட்டு சொல்கிறேன் ,நான் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானால் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவேன். அவ்வாறு என்னால் நிறைவேற்ற முடியாவிட்டால் நான் மக்கள் முன்பு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்தார்.





0 Comments