திருச்சி சமயபுரம் கே. இராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியின் 14-ஆம் பட்டமளிப்பு விழாவும், கே. இராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரியின் 12-ஆம் பட்டமளிப்பு விழாவும் கல்லூரி வளாகத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது....
இவ்விழாவில் 2021–2025 ஆம் ஆண்டின் இளநிலை மற்றும் 2023–2025 ஆம் ஆண்டின் முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது....
"பட்டதாரிகள் தங்களுடைய 30 ஆண்டு காலத் தொழில் பயணத்தைத் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும். முதல் 10 ஆண்டுகளில் வலுவான தொழில்முறை அடித்தளத்தையும், அடுத்த 10 ஆண்டுகளில் தொழில்சார் தொடர்புகளை விரிவுபடுத்தி முன்னேற்றத்தையும், இறுதி 10 ஆண்டுகளில் தலைமைத்துவத் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்....
மேலும், நிதி மேலாண்மை, சேமிப்பு மற்றும் ஃபையர் (FIRE - Financially Independent, Retire Early) கொள்கையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்கள் திறன்களைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்....
இதனைத் தொடர்ந்து, ராமகிருஷ்ணன் குழும நிறுவனங்களின் செயல் இயக்குநர் எஸ். குப்புசாமி தலைமையில் பட்டதாரிகள் தொழில்முறை நெறிமுறைகளையும், சமூகப் பொறுப்பையும் நிலைநிறுத்துவதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்....
இவ்விழாவில் கே. இராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 60 பல்கலைக்கழகத் தரவரிசை பெற்ற மாணவர்கள் உட்பட 657 பேருக்கும், கே. இராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த 41 பல்கலைக்கழகத் தரவரிசை பெற்ற மாணவர்கள் உட்பட 502 பேருக்கும் என மொத்தம் 1,159 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன....
நிகழ்வில் ராமகிருஷ்ணன் குழும நிறுவனங்களின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறைத் தலைவர் எஸ். முகமது ஜான்ஷா நவாஸ், துறைத் தலைவர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், பட்டதாரிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்....






0 Comments