NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** மத்திய அரசை கண்டித்து திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

 திருச்சியில் RSS சங்பரிவார் உள்ளிட்ட  அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தி மக்கள் அதிகாரம் கண்டன போராட்டம்.. 


மக்கள் அதிகாரம் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து தமிழகம் தழுவிய அளவில் கர்நாடகாவில் பள்ளி மாணவிகளை ஹிஜாப் அணிய கூடாது என இஸ்லாமிய மக்களை ஒடுக்கும் வகையில் RSS பா.ஜ.க  மாணவர்கள் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் வகையில் கலவரத்தைத் தூண்டுவதை கண்டித்து அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கங்களை இணைத்து  ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.


இதன் ஒரு பகுதியாக திருச்சி யில்மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகே மக்கள் அதிகாரம் சமூக பொதுநல அமைப்புகளுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




கர்நாடகாவில் பள்ளி மாணவிகளை ஹிஜாப் அணிய கூடாது என இஸ்லாமிய மக்களை ஒடுக்கும் வகையில் ஆர்எஸ்எஸ், பிஜேபி மாணவர்கள் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் வகையில் கலவரத்தைத் தூண்டுவதை உடனடியாக தடுக்கப்பட வேண்டும் ஆர் எஸ் எஸ் சங்பரிவார் உள்ளிட்ட அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி


மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ராஜா தலைமையில்நூற்றுக்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன உரையை மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன் வழங்கினார்.


இதில் சமூக நீதிப் பேரவை தலைவர் ரவிக்குமார், தமிழை விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் சின்னதுரை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிர்வாகி வழக்கறிஞர் கென்னடி, திராவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் புதியவன், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் நிர்வாகியை சம்சுதீன், மக்கள் கலை இலக்கியக் கழக மாவட்டச் செயலாளர் ஜீவா, மக்கள் அதிகார ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments