BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** என்னை நீக்கியது செல்லாது ஓ.ராஜா பேட்டி

என்னை நீக்கியது செல்லாது ஓ.ராஜா பேட்டி


அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பெரியகுளத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-



அ.தி.மு.க.வுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்று தான் அவரை நேரில் சந்தித்தேன். தற்போதைய இரட்டை தலைமையின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பது இந்த தேர்தல் முடிவுகள் மூலம் அனைவருக்கும் தெரியும். அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளது.


தற்போது அ.தி.மு.க.வில் கோஷ்டிகளாக உள்ளனர். ஒரு கட்டுப்பாடும் கிடையாது. எதிரெதிராக பேட்டி மட்டுமே கொடுக்கின்றனர். கட்சியில் இருந்து நிர்வாகிகளை தொடர்ந்து நீக்கம் செய்வது நல்லதல்ல. எனக்கு பொதுச்செயலாளர் சசிகலாதான். என்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments