BREAKING NEWS *** சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஐந்தாண்டு சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டது அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வரும் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு *** சவூதியில் இறந்தவரின் உடல் எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் இந்தியன் சோசியல் ஃபோரம் உதவியால் திருச்சியில் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு

சவூதியில் இறந்தவரின் உடல் எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் இந்தியன் சோசியல் ஃபோரம் உதவியால் திருச்சியில் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு

சவூதி அரேபியா தம்மாம் பகுதியில் வேலை செய்து வந்த விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த தேவசிர்வாதம் என்பவரின் மகன் ராபர்ட் (51), மனைவியின் பெயர் சுகந்திராணி இவர்களுக்கு  2 மகள்கள் உள்ளனர். ராபர்ட் என்பவர் தம்மாமில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்த நிலையில் ஏப்ரல் மாதம் 5ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். 


வெளிநாட்டில் மரணமடைந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவுமாறு அவருடைய உறவினர்கள் விருதுநகர் மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர். உடனே எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் தம்மாமில் உள்ள இந்தியன் சோசியல் ஃபோரம் (ISF) நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி செய்யும்மாறு கேட்டு கொண்டனர்.

சோசியல் ஃபோரம் நிர்வாகிகள் எடுத்த தொடர் முயற்சியின் பலனாகவும் இந்திய தூதரகத்தின் உதவியினாலும் இறந்த ராபர்ட்டின் உடலை தாயகத்திற்கு 2022 ஏப்ரல் 28ம் தேதி திருச்சி வந்த ஷிலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் மாலை 3-30 மணியளவில் திருச்சி  விமானநிலையத்திற்கு அவரது புதஉடலானது வந்தது. 

திருச்சி தெற்கு  மாவட்ட செயலாளர் ஏர்போர்ட் மஜீத் அவர்களின் தலைமையில், ஏர்போர்ட் கிளை செயலாளர் டான் சேட் அவர்களும், உறையூர் ஆம்புலன்ஸ் இஸ்மாயில் ஆகியோர் இன்று மாலை திருச்சி விமான நிலையம் சென்று இறந்த ராபர்ட்டின் உடலை பெற்று அவருடைய சொந்த ஊருக்கு எடுத்து செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, அவரின் உடலை குடும்பத்தாரிடம்  ஒப்படைத்தனர்.

 துரிதமாக செயல்பட்டு இறந்த உடலை தாயகம் அனுப்ப உதவி செய்த இந்தியன் சோசியல் ஃபோரத்தின் நிர்வாகிகளுக்கும், SDPI கட்சியின் நிர்வாகிகளுக்கும் ராபர்ட் அவர்களின் குடும்பத்தார் தங்களது நன்றியினை தெரிவித்தார்கள்.

Post a Comment

0 Comments