SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதி சார்பாக இஃப்தார் என்னும் சமூக ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி கிழக்கு தொகுதி தலைவர் தர்கா.முஸ்தபா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட செயலாளர் மதர்.Y. ஜமால் முகமது மற்றும் கிழக்கு தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த இஃப்தார் நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சியின் மண்டல தலைவர் இமாம்.அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி,திமுக மலைக்கோட்டை பகுதி செயலாளர் M.மதிவாணன்B.sc.MC கோட்டத்தலைவர் மண்டலம்-3 ,திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை பொருளாளர் மௌலானா அல்அமீன் யூசூபி, விசிக நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அ.க.தமிழாதன்,
எஸ்டிபிஐ கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் நியாம துல்லா,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மண்டல தலைவர் அமீர் பாஷா,திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா ஆகியோரும், மேலும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட ,தொகுதி, அணி, மற்றும் கிளை நிர்வாகிகள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 Comments