NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** அரியமங்கலம் கோட்ட தலைவருக்கு மக்கள் ஆதரவு...!

அரியமங்கலம் கோட்ட தலைவருக்கு மக்கள் ஆதரவு...!

திருச்சி அரியமங்கலம் கோட்ட தலைவர் ஜெயநிர்மலாவிற்கு  மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.... திருச்சி மாநகராட்சி 32 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினர் என்ற பதவி கிடைத்தது....

அதன் பிறகு மக்களிடையே அவருக்கு கிடைத்த ஆதரவு காரணமாக அரியமங்கலம் கோட்ட தலைவராக அந்தஸ்து உயர்ந்தது....அவர் தற்போது 32 வது வார்டு பகுதியில் வசித்து வருகிறார்.....


அவரது வார்டுக்குட்பட்ட பகுதியான படையாச்சி தெரு, மரியம் நகர், கீரை தோட்டம், அருளானந்த புரம், அன்னை நகர், மல்லிகைபுரம்,இருதயபுரம், ஆசாரி தெரு , சர்பத் முதலியார் தெரு , ஆகிய பகுதிகளில் நேரில் சென்று மக்களை சந்தித்து பிரச்சினைகளை தீர்த்து வருகிறார்....அவரது வார்டு பகுதியில் சாக்கடை பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, சாலை பிரச்சனை ஆகிய அடிப்படை தேவைகளை கேட்டறிந்து திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு மேற்கொள்கிறார்
அவரது வார்டு பகுதியில் நடைபெறும் நடைபெறும் முக்கிய விழாக்களில பங்கேற்று சிறப்பு செய்கிறார்.... முக்கிய தலைவர்கள் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடத்தியுள்ளார்....சிறப்பாக செயல்படும் அரியமங்கலம் கோட்ட தலைவர் ஜெயநிர்மலா அவர்களுக்கு  பொதுமக்கள்  சார்பாக இறைவன் பந்தல் ஆனந்த்  நன்றி தெரிவித்துள்ளார்..

Post a Comment

0 Comments