திருச்சியில் குழந்தைகளுக்கான வாத்சல்யா ஆசீர்வாத் சேமிப்பு திட்ட நிகழ்ச்சி இன்று திருச்சி மாவட்ட நல நிதி அலுவலகத்தில் NPS வட்சால்வா அவுட்ரீச் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக திருச்சி உதவி ஆட்சியர். க்ஷேத்ரிமாயும் தீபிசானு, PFRDA நிர்வாக இயக்குநர் ஸ்ரீவெங்கடேஸ்வரலுபெரி, முதன்மை பொது மேலாளர் மோகன்காந்தி, பொது மேலாளர் கவிதாசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் PERDAL, CAMS CRA உடன் இணைந்து, குழந்தைகளிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கும் நிதி விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் பள்ளிகளில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாவட்ட அதிகாரிகள் மற்றும் பாயிண்ட்ஸ் ஆஃப் பிரசன்ஸ் பிரதிநிதிகளை நீண்டகால நிதி திட்டமிடல் குறித்த விழிப்புணர்வை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் விதத்தில் நிதி விழிப்புணர்வு குறித்த கருப்பொருள் அடிப்படையிலான வரைதல் போட்டி நடைபெற்றது.
NPS வாத்சல்யா திட்டத்தின் கீழ், பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் அனைத்து மைனர் குழந்தைகளின் சார்பாகவும் கணக்கைத் திறந்து இயக்கலாம், குறைந்தபட்ச ஆரம்ப மற்றும் வருடாந்திர பங்களிப்பு 250 ரூபாய் மற்றும் முதலீடுகளுக்கு உச்ச வரம்பு இல்லை. 18 வயதை எட்டியதும், கணக்கு ஒரு வழக்கமான NPS கணக்காக தடையின்றி மாறலாம். இது நீண்ட கால செல்வத்தை உருவாக்குவதைத் தொடர அனுமதிக்கிறது.
இது "வாத்சல்யா ஆசீர்வாத்" ஆக உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து பரிசு பங்களிப்புகளையும் அனுமதிக்கிறது. இந்தத் திட்டம் 18-21 வயதுக்குட்பட்ட விதிகளுடன் பகுதி திரும்பப் பெறும் வசதியையும் (நான்கு முறை) வழங்குகிறது.








0 Comments