NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** சுற்றுச்சூழல் விழிப்புணர்வு 1330 திருக்குறள் எழுதி உலக சாதனை

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு 1330 திருக்குறள் எழுதி உலக சாதனை

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையை சேர்ந்த பள்ளி மாணவ,மாணவிகள் மை ஊற்றி எழுதும் பேனா (இன்க் பேனா) ஒரு நிமிடத்தில் 1330 திருக்குறள் எழுதி உலக சாதனை முயற்சி.


கோவை மாவட்டம், கோவை புதூர் ஆஸ்ரமம் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவ,மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி புதிய  உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.அதன் படி பள்ளிகளில் பயன்படுத்தப்படும் பால் பாயிண்ட் பேனா எனும் பிளாஸ்டிக் ரக பேனாவால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மை ஊற்றி எழுதும் பேனாவை பயன்படுத்தி 1330 திருக்குறளை ஒரு நிமிடத்தில் ஆஸ்ரமம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இணைந்து எழுதி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.. 

இது குறித்து பள்ளி நிர்வாகி கௌரி உதயேந்திரன் கூறுகையில்,பள்ளி மாணவர்களிடையே மை ஊற்றி எழுதும் பேனாவில்  எழுதுவதை ஊக்குவிக்கும் விதமாக இந்த சாதனை நிகழ்வை நடத்தியதாக தெரிவித்தார்.. மாணவர்களின் இந்த சாதனை தாய்த்தமிழ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.


கோவை நிருபர் கோபிநாத்.

Post a Comment

0 Comments