NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** அதிமுக எடப்பாடி அணியினர் 3வது நாளாக ஆலோசனை கூட்டம்

அதிமுக எடப்பாடி அணியினர் 3வது நாளாக ஆலோசனை கூட்டம்

 ஒற்றை தலைமை கோரி  அதிமுக  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 3வது நாளாக தில்லை நகர் பகுதி செயலாளர் முஸ்தபா  தலமையில் நடைபெற்றது.

அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை என்ற கோரிக்கையோடு இபிஎஸ், ஓபிஎஸ் பிரச்சினைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தனித்தனியாக எடப்பாடிக்கு ஆதரவாகவும் ஒற்றைத் தலைமை கோரிக்கையை முன்வைத்து செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.


இந்நிலையில் திருச்சி மாநகர் தில்லை நகர் பகுதி செயலாளர் முஸ்தபா தலமையில்  மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் பகுதி வாரியான கட்சியினரின்  ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து  நடைபெற்று வருகிறது.



இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களாக :  ஒட்டு மொத்த அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் எதிர்பார்ப்பை நினைவாக்கும் விதமாக எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆவதற்க்கும் தில்லை நகர் பகுதி கழகம் ஏகமனதாக ஆதரிக்கிறது.


கழகத்திற்க்கு அவப்பெயர் ஏற்படுத்தி திமுக அரசுக்கு துணைபோகும் விஷக் கிருமிகளையும் , கருப்பு ஆடுகளையும்  வண்மையாக கண்டிக்கிறோம் உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டது.


இக்கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர் மாவட்ட அணி செயலாளர், மாவட்ட பகுதி கழகச் செயலாளர்கள்

தில்லைநகர் பகுதி வட்ட செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments