தமிழகம் முழுவதும் நடைபெறும் குற்ற செய்திகளை நடுநிலையாக வெளியிடும் ழகரம் புலனாய்வு இதழின் 8 ஆம் ஆண்டு துவக்க விழா திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் ராணா மினி ஹாலில் நடைபெற்றது...
இந்த விழாவில் சமூக ஆர்வலருமான ழகரம் இதழின் ஆசிரியர் இரா.ரெங்கராஜ் தலைமை வகித்தார்.. ழகரம் புலனாய்வு இதழின் உதவி ஆசிரியர் முத்துக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்..
மேலும் இந்நிகழ்வில் அரசியல் நீதிமான் ஆசிரியர் அருண் ராமராஜன் சிறப்புரை ஆற்றினார்.. இதனை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.கே ராஜா
அவதாரம் இதழின் ஆசிரியர் அல்லூர் சீனிவாசன், ஈகிள் ரவுண்ட்ஸ் ஆசிரியர் நம்பியப்பன் , அரசியல் ரிப்போர்ட்டர் ஆசிரியர் பாண்டியன், மனித விடியல் ஆசிரியர் மோகன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்.. "சுமைதாங்கி" ஆசிரியர் எகியா, மக்கள் உரிமை இதழின் ஆசிரியர் பால ராஜா, நெற்றிக்கண் செய்தியாளர் ரமேஷ், லட்சியம் இதழின் ஆசிரியர் சதாசிவம்,
முதன்மை செய்தி நாளிதழ் ஆசிரியர் கார்த்திகேயன், அக்னி சிறகு ஆசிரியர் இக்பால், அந்நியன் ஆசிரியர் தேவராஜ், அரசியல் ஆடுகளம் இதழின் ஆசிரியர் பாலா , மெடிக்கல் எக்ஸ்பிரஸ் ஜெயபால், ஜித்தன் இதழ் பாலா, உள்ளும் புறமும் ஆசிரியர் கோபிநாத், இலக்கியத் தாகம் கவி பெரியசாமி , தேசபக்தி நாளிதழ் வீரமணி, நியூஸ் டைம் இணை ஆசிரியர் வையாபுரி ஆகிய இதழின் ஆசிரியர்கள் ழகரம் 8 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 Comments