NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** விஜய் படத்தை டாட்டூவாக வரைந்த டாட்டூ ஓவியர் கோடிக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பாராட்டு

விஜய் படத்தை டாட்டூவாக வரைந்த டாட்டூ ஓவியர் கோடிக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பாராட்டு

திருச்சி குமார வயலூர் பகுதியில் தளபதி விஜய் மஹால் என்ற பெயரில் திருமண மண்டபத்தை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 


முன்னதாக திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள பிரபல "ஒய் ஒய்" டாட்டு ஸ்டுடியோவின் உரிமையாளரான டாட்டு ஓவியர் கோடி என்பவர் கடந்த மாதம் வெளியிடப்பட்ட பீஸ்ட் திரைப்படத்தின் நடிகரும், விஜய் மக்கள் இயக்க தலைவருமான தளபதி விஜயின் புகைப்படத்தை விஜய் ரசிகரான ராஜ் பாரதி என்பவரின் முதுகில் 16-மணி நேரத்தில் வரைந்தார். அதற்கு பாராட்டு தெரிவித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டாட்டு ஓவியர் கோடிக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். மேலும் திரைப்பட நடிகர் விஜய் அவர்களை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.



குறிப்பாக திரைப்பட நடிகர் விஜய்யின் உருவத்தை வரைந்த டாட்டு ஓவியர் கோடியிடம் பிரபல நடிகர்களான அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர்கள் அவர்களின் உருவப்படத்தை வரைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Post a Comment

0 Comments