BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சியில் இருந்து இலங்கைக்கு விமான கார்கோ சேவை திடீர் நிறுத்தம்

திருச்சியில் இருந்து இலங்கைக்கு விமான கார்கோ சேவை திடீர் நிறுத்தம்

 திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது.இதில் அதிக அளவில் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு பயணம் செய்யும் பயணிகளைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் அதிக அளவில் இலங்கை வழியாக சென்று வாழ்வது வாடிக்கை.


அதனைத் தொடர்ந்து திருச்சியில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை அதிக அளவில் வளைகுடா நாட்டு பயணிகளை இலங்கை வழியாக சென்று வருவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது.

அந்த வகையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து 40 ஆண்டுகளாக இலங்கைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சேவை வழங்கி வருகிறது.

தொடக்கத்தில் வாரத்திற்கு 3 சேவைகளாக இருந்து வந்த நிலையில் பின்னர் படிப்படியாக இந்த சேவை அதிகரிக்கப்பட்டு தினசரி 2 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது.

அந்த வகையில் காலை 9.30 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு வந்து, மீண்டும் திருச்சியில் இருந்து இலங்கை நோக்கி காலை 10.30 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

அதேபோன்று இலங்கையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானம் மீண்டும் 3.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.

Post a Comment

0 Comments