// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** தேசிய கல்லூரி மற்றும் சர்வதேச ஆய்விதழ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தேசிய கல்லூரி மற்றும் சர்வதேச ஆய்விதழ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்சி தேசியக்கல்லூரியின்  தமிழாய்வுத்துறை மற்றும் கோயம்புத்தூர் சர்வதேச ஆய்விதழ் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.சுந்தரராமன் அவர்களும் ஆய்விதழ் சார்பில் ஆசிரியர் முனைவர் ப.சசிரேகா அவர்களும் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். உடன் தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ச.ஈஸ்வரன், துணை முதல்வர் முனைவர் வி.நந்தகோபாலன் மற்றும் பொறுப்பாளர் முனைவர் க.புவனேஸ்வரி ஆகியோர் இருந்தனர். 


இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமானது தமிழ்த்துறை ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும் வகையில் கருத்தரங்கம்,பயிலரங்கம் போன்றவற்றை நடத்துவதாகும்.இதன் வாயிலாக தமிழ்த்துறை ஆய்வாளர்கள் பயன்பெறுவார்கள் என்பதில் ஐயமில்ல.

நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments