BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** காமராஜர் பிறந்தநாள் விழா : இந்திய நாடார் பேரவை சார்பில் நலத்திட்டம் வழங்கும் விழா- அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

காமராஜர் பிறந்தநாள் விழா : இந்திய நாடார் பேரவை சார்பில் நலத்திட்டம் வழங்கும் விழா- அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

  காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய நாடார் பேரவை சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, 120 பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப்பை, நோட்டு புத்தகம், கல்வி உதவித்தொகை என மொத்தம் ரூ.ஒன்றரை லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய நாடார் பேரவை சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பேரவையின் தலைவர் ஜே.டி.ஆர்.சுரேஷ் தலைமை தாங்கினார்.

இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, 120 பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப்பை, நோட்டு புத்தகம், கல்வி உதவித்தொகை என மொத்தம் ரூ.ஒன்றரை லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


விழாவில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, எம்.எல்.ஏ.க்கள் சவுந்தரபாண்டியன், பழனியாண்டி, பகுதி தி.மு.க. செயலாளர், கண்ணன், காஜாமலை விஜய், மோகன்தாஸ், இளங்கோ அனைத்திந்திய சித்தமருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் தமிழரசி சுப்பையா,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ரவி முத்து–ராஜா, செயலாளர் எஸ்.பி.பாபு, பொருளாளர் கணேசன், இந்திய நாடார் பேரவை மாநகர் மாவட்ட செயலாளர் பீமநகர் ராஜேஷ், மாவட்டத் தலைவர் ஏர்போர்ட் துரைபழம், பொதுச் செயலாளர் டி.ஜெயராஜ், மாநில அமைப்பாளர் எஸ்.பாலகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.வி.கணேசன், துணைப் பொருளாளர் கே.ஆர்.பி ராஜா, கல்வி துணை இயக்குனர் ஏ.எபினேசர்,

மாவட்டத் துணைச் செயலாளர்கள் செல்வராஜ், பாண்டியன், ஆலோசனை குழு அமைப்பாளர் அய்யனார், பொன்ராஜ், மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.முருகானந்தம், செயற்குழு உறுப்பினர்கள் சேவியர், கிங்ஸ்டன், எம்.சுந்தர், கௌதம், சுப்ரமணியன், ராம்ஜி நகர் கிருஷ்ணன், எடமலைப்பட்டி புதூர் நாடார் நலச்சங்க தலைவர் பொன்ராஜ் நாடார், செயலாளர் இசக்கி முத்து நாடார், பொருளாளர் ஜான் நேசமணி நாடார், மிளகுபாறை வியாபாரிகள் சங்கம் ஜான் வெஸ்லி மற்றும் திரளான நாடார் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments