BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

மக்கள் உரிமை கூட்டணி திருச்சி தெற்கு மாவட்ட அமைப்பாளர் ஜோசப் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை அளித்தார் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..,


திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் சேதுராப்பட்டி வருவாய் கிராமத்தில் உள்ள சர்வே எண் 99 -ல் அரசுக்கு சொந்தமான நீர் நிலைகள் குளத்தை ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தால் மேற்கண்ட நீர் நிலைகள் மற்றும் கால்நடைகள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் நிலத்தடி நீரும் குறைந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் மழைக் காலங்களில் நீர் சேமிக்கப்படாமல் வீணாகி வறண்டு கிடைக்கிறது.


 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் கே கவுல் , நீதிபதி சத்திய நாராயணன், நீதிபதி சிவஞானம்  ஆகியோர் கூறியது போல் நீர்நிலைகள் மற்றும் ஏரி குளங்களை ஆக்கிரமிக்க அரசு அனுமதிக்க கூடாது. 


எனவே மேலே குறிப்பிட்ட பகுதியில் வருவாய் பதிவேடு அளவுகளின் படி அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments