BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** பக்ரீத் பண்டிகை: திருச்சியில் இஸ்லாமியர்கள் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகை: திருச்சியில் இஸ்லாமியர்கள் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை

இஸ்லாமிய முக்கிய பண்டிகையான  பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பண்டிகையும் ஒருவித அர்த்தம் தோய்ந்தே இருக்கின்றன. 


இறைக்கட்டளைக்கு பணிந்து பெற்ற மகனையே பலியிடத் துணிந்த இப்ராகிம் நபிகளாரின் தியாகம் இத்திருநாளில் நினைவு கூறப்படுகிறது. ஒவ்வொரு மனிதருக்கும் இறைவன் வழங்கிய அருட்கொடைகளை நினைவு கூர்ந்து, இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் இத்திருநாள் இருக்கிறது. ஏழை, எளியோர், தேவையுடையோருக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்த நிறைவில் மனம் மகிழ்ந்து கொண்டாடும் மகத்தான நாளாகவும் இப்பண்டிகை நாள் இருக்கிறது.



பெருநாளை 'பக்ரீத்' என்கிறோம். 'பக்ரி' என்றால் 'ஆடு' பொருள் தருகிறது. இவ்வகையில் ஆட்டை அறுத்து குர்பானி தரப்படுவதால், இந்த பெருநாளை 'பக்ரீத்' என்றழைப்பது வழக்கமாகி இருக்கிறது. இறைவன் அளித்த உயிர், உடமை, நேரம் என அனைத்தையும் எச்சூழலிலும் தியாகம் செய்கிற உன்னத உணர்வின் ஆணி வேராகவே 'குர்பானி' விளங்குகிறது.


பெருநாளை உலகம் முழுவதும்  இஸ்லாமியர் தொழுகையுடன் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக திருச்சி மரக்கடையில்  உள்ள பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்



பக்ரீத் கூட்டுத் தொழுகை நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஒன்றிணைந்து தொழுகையில் ஈடுபட்டனர்.  யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பீமநகர் பகுதியில் மாநில தலைமை அலுவலகம் அருகே சிறப்பு தொழுகை நடைபெற்றது... இதில் 1,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்..  இந்நிகழ்வில் மாநில தலைவர் ரபீக் பக்ரீத் பண்டிகை குறித்து சிறப்புரையாற்றினார்... 





இதனை தொடர்ந்து தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.. இதில் மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் சிறப்புரையாற்றினார் ...



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் அரியமங்கலம் காமராஜ் நகர் தனியார் பள்ளியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.. இதில் 500 க்கு ம் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள்   பங்கேற்றனர்..SDPI கட்சி மண்டல தலைவர் இமாம்.ஹஸ்ஸான் பைஜி உரை நிகழ்த்தினார்..பின்னர்  கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Post a Comment

0 Comments