BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** அறியாற்றின் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி தீரன் நகர் பாரதியார் மக்கள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அறியாற்றின் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி தீரன் நகர் பாரதியார் மக்கள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி நாச்சிகுறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தீரன் சின்னமலை நகரில் பாரதியார் மக்கள் நல சங்கம் சார்பில் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தீரன் நகர் பாரதியார் மக்கள் நலச் சங்கத்தின் கௌரவ தலைவர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமதாஸ், பொருளாளர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.‌ இந்த ஆர்ப்பாட்டத்தில் தீரன் நகர் பாரதியார் மக்கள் நல சங்கத்தின் உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்



இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:- அறியாற்றின் வெள்ளப்பெருக்கு காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்றி தீரன் நகர் மற்றும் சுற்றுப்புற நகர்களின் வீடுகளை காப்பாற்ற கோரியும், புங்கனூரில் 90 மீட்டர் அகலம் கொண்ட அரியாறு தீரன் நகரில் 12 மீட்டர் அகலமாக குறுக்கி விட்ட நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றி அறியாற்றை சீரமைப்பு செய்திட கோரியும், நாச்சி குறிச்சி பஞ்சாயத்தின் நிர்வாகத்தின் சீர்கேடுகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments