NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** நூலக உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் நிகழ்ச்சி

நூலக உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் நிகழ்ச்சி

 திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். தென்னூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விமலா முன்னிலை வகித்தார். திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் புதுப்பித்த அட்டைகளை நூலகர் புகழேந்தி வழங்கினார்.


 ‘‘படிப்பதால் கல்வித் தரம் உயரும். வாசிப்பதால் வாழ்க்கைத் தரம் உயரும்” என்பதை பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments