NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** இடியும் நிலையில் அங்கன்வாடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெற்றோர்கள்

இடியும் நிலையில் அங்கன்வாடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெற்றோர்கள்

 திருச்சி மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் இடியும் நிலையில் உள்ளது.. 


இதனை  சுட்டிக்காட்டி புகைப்பட ஆதாரங்களுடன் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.. இது சம்பந்தமாக கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக பிடிஓ அவர்களிடம் மூன்று முறை விண்ணப்பம் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதை சுட்டிக்காட்டியும் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கட்டிடம் இடிந்து விழுந்து விபரீதம் ஏற்படும் என்பதையும் அவ்விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது...



அப்பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் 20க்கும் மேற்பட்டோர் மக்கள் உரிமை மீட்பு இயக்கம் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி ராபியத்துல் பசரியா அவர்களின் தலைமையில் மேற்படி கோரிக்கையை ஆட்சித் தலைவரிடம் நேரில் அளித்தனர்

Post a Comment

0 Comments