BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி தபால் நிலையம் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி தபால் நிலையம் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் அரிசி,பால், தயிர் உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்து அமல்படுத்தியுள்ளது மத்திய அரசை கண்டித்து. 




திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு இருந்து மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்று மெயின் கார்ட் கேட் எதிரேயுள்ள தெப்பக்குளம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





இந்த முற்றுகை போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Post a Comment

0 Comments