"சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள்" என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது
திருச்சி டிசைன் ஓவிய பள்ளி சார்பில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள் தலைப்பில் ஓவியக் கண்காட்சி திருச்சியில் ஆகஸ்ட் 13,14,15 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள் தலைப்பில்
முப்பத்தி எட்டு மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் நான்கு ஓவியங்களை காட்சிப்படுத்தியிருந்தனர். அதில் ஒரு ஓவியம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த ஓவியம் ஆகும். சுதந்திரப் போராட்ட வீரர்களில் வேலு நாச்சியார், பகத்சிங், திருப்பூர் குமரன், கட்டபொம்மன்,
இத்தகைய ஓவியங்களை பல்வேறு வகையான எண்ணெய் ஓவியம்,வண்ணக்கோல்,செயற்கை வண்ணக் கூழ்மங்கள், நீர்வர்ண ஓவியம்,மை ஓவியங்கள்,பூச்சு ஓவியங்கள் என வண்ண கலவை பகுதியில் கருத்தியல் மற்றும் ஆக்கபூர்வமான யோசனைகளின் செறிவினை மாணவர்கள் காட்சிப் படுத்தி இருந்தனர்.
ஓவியக் கண்காட்சி ஏற்பாட்டினை டிசைன் ஓவியப் பள்ளியின் நிர்வாக இயக்குனர் மதன், முதல்வர் நஸ்ரத் பேகம் செய்திருந்தனர்
0 Comments