திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் போசம்பட்டி பஞ்சாயத்து கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே சுதந்திரம் மற்றும் சுற்றுச்சூழல் என்கிற தலைப்பில் கட்டுரைபோட்டி பேச்சு போட்டி மற்றும் ஓவிய போட்டிகளில் நடத்தப்பட்டது..
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது நமது தாய் திருநாடு சுதந்திரம் அடைந்தது 75 ஆண்டை சிறப்பிக்கும் வகையில் நாடு முழுவதும் குக்கிராமத்தில் தொடங்கி நகர மாநகர பகுதிகள் வரை ஜாதி மதம் மொழிகளை கடந்து அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினைந்து இந்த 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்..
அமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் இளையராஜா அமைப்பின் மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா மகளிர் பிரிவு இணைசெயலர் அல்லிகொடி ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற தொடக்கப்பள்ளி மாணவ மணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர் இந்நிகழ்வில் அந்தநல்லூர் ஒன்றியம் போசம்பட்டி பஞ்சாயத்து அரசு உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஓ. அழகர்சாமி உதவி தலைமை ஆசிரியர் ப. மீனாட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சி. கலைச்செல்வி உதவி தலைமை ஆசிரியர் சு. சாந்தி உதவி ஆசிரியர்கள் வி. தனலெஷ்மி எஸ். விஜயஹி ஏ. சமீம் டி. தேன்மொழி அனுஷ்மா நந்தினி மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் திரளான மாணவ மாணவிகள் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
0 Comments